Friday, December 20, 2013

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் 2013 A/L


இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணிதத்துறையில் இராஜசேகரன் யதுசன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆவது இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

உயிரியல் துறையில் இரட்ணசிங்கம் பிரணவன் மாவட்ட மட்டத்தில் 2 ஆவது இடத்தினையும், தேசிய மட்டத்தில் 8 ஆவது இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவர் ஆங்கில மொழி மூலமாக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக துறையில் கிருபாலன் சுபாங்கன் மாவட்ட மட்டத்தில் 7 ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டார்.

அதே போன்று கலைத்துறையில் 2A,B சித்தியினை சிறீஸ்கந்தராஜா சிவஸ்கந்தசிறி பெற்றுகொண்டுள்ளார்.

3A சித்தி பெற்ற மாணவர்களது விபரம் :

கணித துறை :

1) இராஜசேகரன் யதுசன் ( மாவட்ட நிலை - 01 , தேசிய நிலை - 03)
2) சண்முகலிங்கம் குருபரன் ( மாவட்ட நிலை - 04 , தேசிய நிலை - 22)
3) சிவகுமார் மேகலாதன் ( மாவட்ட நிலை - 05 , தேசிய நிலை - 25)
4) நகுலநாதன் லவலோஜன் ( மாவட்ட நிலை - 08 , தேசிய நிலை - 40)
5) சந்திரநேசன் ராம்ராஜ் (மாவட்ட நிலை - 09)
6) கைலாசபதி சுதாகர் (மாவட்ட நிலை - 11)
7) குணாநந்தசீலன் நிலக்சன் (மாவட்ட நிலை - 13)
திருலிங்கம் ஆதவலோசன் (மாவட்ட நிலை - 16)
9) செந்தில்நாதன் கிருசாந் (மாவட்ட நிலை - 34)
10)குமாரசாமி கஜானன் (மாவட்ட நிலை - 40)
11)புண்ணியராஜா திவாகரன் (மாவட்ட நிலை - 41)
12)நந்தகுமாரன் கேதீஸ்வரன் (மாவட்ட நிலை - 43)
13)சண்முகநாதன் சந்தோஸன் (மாவட்ட நிலை - 52)

உயிரியல் துறை :

14) இரட்ணசிங்கம் பிரணவன் ( மாவட்ட நிலை - 02 , தேசிய நிலை - 08)
15) துரைசிங்கம் ஆதவன் (மாவட்ட நிலை - 05)

வர்த்தக துறை :

16) கிருபாலன் சுபாங்கன் (மாவட்ட நிலை - 05)
17) இதயராஜா ரமணன்
18) கோபலச்சந்திரன் குகரூபன்



 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes